Type Here to Get Search Results !

உம் திருசந்நிதியில் நான் என்னை அர்ப்பணித்தேன் | Tamil Christian Song

 1. உம் திருசந்நிதியில்

நான் என்னை அர்ப்பணித்தேன்

என் கிரியையால் அல்ல

உம் தயவால் மாத்ரம்

நீர் என்னை ஏற்றுக்கொண்டீர்


இயேசு ராஜாவே நீர் போதும்

நேசரே நீர் வேண்டும்

உன்னதர் நீரே போதும்

தூதர்கள் போற்றிடும்

சுத்தர் வணங்கிடும்

உன்னதராம் இயேசுவே


2.கார்மேகப் பாவங்களை

முற்றிலும் அகற்றினீரே

என் ஆத்ம மீட்பை நீர்

அருமையாய் எண்ணி உம்

ஜீவனைத் தந்திட்டீரே


3. துரோகியாம் என்னையுமே

நண்பனாய் ஏற்றுக்கொண்டீர்

எனக்காக அல்ல நான்

உமக்காகவே இனி

ஜீவிப்பேன் ஆயுள் எல்லாம்