Type Here to Get Search Results !

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் | Tamil Christian Song

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (2)

என் நாட்கள் முடியும்வரை

என் ஜீவன் பிரியும்வரை

என் சுவாசம் ஒழியும்வரை

உம்மையே ஆராதிப்பேன் (2)


1. தாயின் கருவில் உருவாகும் முன்னே

பெயர் சொல்லி அழைத்தவர் நீரே

தாயினும் மேலாக அன்பு வைத்து

நீர் எனக்காக ஜீவன் தந்தீரே (2)

- என் நாட்கள்


2. எத்தனை முறை இடறினாலும்

அத்தனையும் மன்னித்தீரே

நன்மையும் கிருபையும் தொடரச்செய்து

என்னை மீண்டும் நடக்க வைத்தீரே (2)

- என் நாட்கள்


3. பாவி என்றே என்னைத் தள்ளிடாமல்

அன்போடு அணைத்துக் கொண்டீரே

என்னையும் உம்முடன் சேர்த்துக்கொள்ள

நீர் எனக்காக மீண்டும் வருவீரே (2)

-என் நாட்கள்