உம் பாதம் பணிந்தேன்
எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்
பாடுவேன் – ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
1.
பரிசுத்தமே பரவசமே
பரனே சருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன் (2)
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம்பாதம்
2.
புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர் (2)
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம்
3.
நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும்
அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம்பாதம்
4.
என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம்பாதம்
5.
என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம் (2)
நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம்பாதம்
6.
சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர் (2)
சீயோனை வாஞ்சித்து நாடிகிறேன் — உம்பாதம்