Type Here to Get Search Results !

உம் பாதம் பணிந்தேன் பாடல் வரிகள்


உம் பாதம் பணிந்தேன்
எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்
பாடுவேன்ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

1. பரிசுத்தமே பரவசமே
பரனே சருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன் (2)
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர்உம்பாதம்

2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்  (2)
நூதன சாலேமில் சேர்த்திடுவீர்உம்பாதம்

3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும்
அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர்உம்பாதம்

4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதேஉம்பாதம்

5. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம் (2)
நேசமுகம் என்று கண்டிடுவேன்உம்பாதம்

6. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர் (2)
சீயோனை வாஞ்சித்து நாடிகிறேன்  — உம்பாதம்