Type Here to Get Search Results !

Tamil Song - 39 - Vanthaalum Yesuvey

வந்தாளும் யேசுவே வாருமிதில் - தேவ
மைந்தர்கள் கூடுமிந் நேரமிதில்

1.பத்மு  தீவில் பரிசுத்த நாளில் வந்த வண்ணமே
சத்துருக்கள் கூட்டமெல்லாம்  சக்தியற்றுச் சோரவே
இத்தினத்தில் இங்கு
வந்திடும் - தேவா

2.நல்வழியை  நாடிடாமல் ஓடும் நரர்
யாவர்க்கும் கல்வாரியின் அன்பையின்று
கர்த்தனே நீர் காட்டியே நற்குணம்
அவர்க்கு நல்கிடும் - தேவா

3.சக்தியில்லை எங்களுக்கு
சாம்பலும் தூசியும்
கர்த்தனே கருணை கூர்ந்து
தந்திடும் சர்வாயுதம்
புத்தியாக யுத்தம் செய்திட - தேவா

4.என்னை நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன்
உத்தரம் பின்னும் நீ அறிந்திடாத
வல்லமைகள் காட்டுவேன்
என்றவா இந்நேரம் வாருமே - தேவா

5.சதா காலங்களிலும் இருப்பேனுங்கள்
கூடவே சத்துருவின் வல்லமைகள் ஒன்றும்
மேற்கொள்ளாதென்றீர் ஆதலாலனந்த

ஸ்தோத்திரம் - தேவா