Type Here to Get Search Results !

என்னைக் கிருபையால் அழைத்தவரே | Tamil Christian Song

என்னைக் கிருபையால் அழைத்தவரே 

உந்தன் கிருபையைப் புகழ்ந்திடுவேன் 

என்னைச் சீர்ப்படுத்தும் 

இன்னும் ஸ்திரப்படுத்தும் 

புது பெலன் தந்து நிலைநிறுத்தும்


1 தாயினைப் போல தேற்றியணைத்தீர் 

தாயுள்ளம் கொண்டவரே 

தந்தையைப் போல தோளின்மேல் 

சுமந்தே சந்ததம் காத்தனீரே 


2 என் பெலவீனத்தில் நவபெலனளித்தே

என்னையும் குணமாக்கினீர்

ஏழைக்குப் பெலனாய் கன்மலை

நிழலில் மறைத்தே பாதுகாத்தீர்


3 பயப்படாதே நான் உன்னுடன் இருப்பேன்

என்று வாக்குரைத்தீரன்றோ

நீதியின் வலங்கரத்தால் உன்னைத்

தாங்கி சகாயம் செய்வேனென்றீர்


4 உம் சித்தம் செய்யவே என்னையர்ப்பணித்தேன்

உம் சத்தம் தொனித்திடுதே

சிலுவை சுமந்தும் ஜீவனைப் பகைத்தும்

சீயோனின் அடிதொடர்வேன்


5 சீயோனின் ராஜனே வேகமாய் வருவீர்

சீயோனின் பணி முடித்தே

சீயோனும் சாலேமும் இணைந்து

உம்முடனே நித்யமாய் மகிழச்செய்யும்