என்னைக் கிருபையால் அழைத்தவரே
உந்தன் கிருபையைப் புகழ்ந்திடுவேன்
என்னைச் சீர்ப்படுத்தும்
இன்னும் ஸ்திரப்படுத்தும்
புது பெலன் தந்து நிலைநிறுத்தும்
1 தாயினைப் போல தேற்றியணைத்தீர்
தாயுள்ளம் கொண்டவரே
தந்தையைப் போல தோளின்மேல்
சுமந்தே சந்ததம் காத்தனீரே
2 என் பெலவீனத்தில் நவபெலனளித்தே
என்னையும் குணமாக்கினீர்
ஏழைக்குப் பெலனாய் கன்மலை
நிழலில் மறைத்தே பாதுகாத்தீர்
3 பயப்படாதே நான் உன்னுடன் இருப்பேன்
என்று வாக்குரைத்தீரன்றோ
நீதியின் வலங்கரத்தால் உன்னைத்
தாங்கி சகாயம் செய்வேனென்றீர்
4 உம் சித்தம் செய்யவே என்னையர்ப்பணித்தேன்
உம் சத்தம் தொனித்திடுதே
சிலுவை சுமந்தும் ஜீவனைப் பகைத்தும்
சீயோனின் அடிதொடர்வேன்
5 சீயோனின் ராஜனே வேகமாய் வருவீர்
சீயோனின் பணி முடித்தே
சீயோனும் சாலேமும் இணைந்து
உம்முடனே நித்யமாய் மகிழச்செய்யும்