Type Here to Get Search Results !

Tamil Song - 38 - Nesaravar En Nesaravar

நேசரவர் என் நேசரவர்
நேசரிலெல்லாம் விசேஷித்தவர்
சோகமடைந்தேன் நேசமதால் - நேசரவர்

1.வெண்மையும் சிவப்புமானவரே
கண்ணை கவர்ந்திடுபவர் அவரே
பதினாயிரங்களில் சிறந்தவரே
அதிசயமானவர் அவர் பெயரே
இவரென் ஆத்தும நேசரே
வருவார் எனக்காய் வேகமே

2.அவர் தலை முழுதும் பொன்மயமாமே
அவர் தலை மயிர் சுருள் சுருளாமே
காகத்தின் நிறம் அவர் முடியாமே
லோகத்தின் ஒளி விளக்கவராமே
இவரென் ஆத்தும நேசரே
வருவார் எனக்காய் வேகமே

3.அவர் கண்கள் கண்ணீர் நிறைந்தவைகள்
கவரும் புறாக் கண்கள் போன்றவைகள்
பாலிலே கழுவப்பட்டவைகள்
நேர்த்தியாய் பதிக்கப்பட்டவைகள்
இவரென் ஆத்தும நேசரே
வருவார் எனக்காய் வேகமே

4.ரூபமதில் அவர்க் கிணையவரே
லீபனோன் மகிமை உடையவரே
கேதுரு போல் அவர் உயர்ந்தவரே
ஏதமிலா சிறப்பானவரே
இவரென் ஆத்தும நேசரே
வருவார் எனக்காய் வேகமே

5.துள்ளிக் குதித்து மலை மேட்டினிலே
வந்திடும் நேசரின் தொனியதுவே
ஆரவார சப்தம் முழங்கிக்கொண்டே
மேகத்தில் ஜோதியாய் தோன்றுவாரே
இவரென் ஆத்தும நேசரே

வருவார் எனக்காய் வேகமே