தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் நானும்
1.அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே மண்ணின்
சாயலை நான் கலைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன்
2.பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கை வேலைஇல்லாதா பொன்வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன்
3.மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே