பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
பாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிட பரமானந்த
கீதம் அங்கே எழும்ப
நீ அங்கிருப்பாயோ (3) சொல் என் மனமே
நான் அங்கிருப்பேனே (3) என் இயேசுவுடன்
1. ஆண்டவர் இயேசு அரசாட்சி செய்ய
அண்டினோ ரெவரும் அவரைச் சேர அன்பர்
அந்த நாள் கண்ணீரும் துடைக்க - நீ
அங்கிருப்பாயோ
2.சோதனைகளை வென்றவரேவரும்
துன்பம் தொல்லைகளைச் சகித்தவரும்
ஜோதி ரூபமாய் சொர்லோகில் ஜொலிக்க- நீ
அங்கிருப்பாயோ
3. ஜெகத்தில் சிலுவை சுமந்தோரெல்லாம்
திருமுடி அணிந் திலங்கிடவும் தேவ
செயல்களுக்காய் சேயர்களா யெல்லாரும் மாற
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே