என் மீட்பரே என் இரட்சகா
என் தேவனே என் கேடகம்
நான் நம்பின என் கோட்டையும்
என் துருகமும் நீரே
1.துதிகளின் பாத்திரனே திருச்சித்தம்
போல்நடத்தி துர்ச்சன பிரவாகத்தில்
தேற்றினீர் போற்றுவேனே- சதி மோச
நாசங்களில் சத்துருவின் பயங்களிலும்
சார்ந்தும்மை நான் ஜீவிப்பேனே
சரணம் சரணம் மேசியாவே
2.தினம் தினம் உம் அருளால்
தீமைகள் வெல்லுவேன் நான்- கன
மகிமை யாவும் உமக்கே செலுத்திடுவேன்
உம்மாலே ஒருவனாக சேனைக்குள்
பாய்ந்திடுவேன் வாழ்நாளெல்லாம் நீர்
என் தஞ்சம் வழி நடத்தும் மேசியாவே