Type Here to Get Search Results !

Azhugaiyin Pallathakkil nadakkum pothellam | அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் | Tamil Christian Song

அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் 

ஆனந்த நீரூற்று நீர்தானைய்யா 

அபிஷேக மழையும் நீர்தானைய்யா


1. சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே 

உம் சமூகம் எவ்வளவு இன்பமானது - 2 

உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு 

பாடி பாடி துதித்து மகிழ்கின்றது


என் தேவனே என் ராஜனே - 2

உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன்

உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்


வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட 

ஒருநாள் உம் சமூகம் மேலானது - 2 

பெலத்தின்மேல் பெலனடைந்து பரிசுத்த வல்லமையால் 

நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன்


கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும் 

எல்லாமே நீர்தானே தகப்பன் நீர்தானே - 2 

நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே 

நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்


உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர் 

உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள் - 2 

என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள் 

துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்