Type Here to Get Search Results !

Tamil Song - 722 - Vaazhnaalil Yaathu Nerittum

வாழ்நாளில் யாது நேரிட்டும்
எவ்வின்ப துன்பத்தில்
நான் போற்றுவேன்
என் ஸ்வாமியை
சிந்தித்து ஆன்மாவில்
பாமாலை கீதங்கள் பாமாலை கீதங்கள்

2. சேர்ந்தே ஒன்றாய்  நாம்
போற்றுவோம்
அவர் மா நாமமே
என் தீங்கில் கேட்டார்
வேண்டலே தந்தார் சகாயமே

3. சன்மார்க்கர் ஸ்தலம் சூழ்ந்துமே
விண் சேனை காத்திடும்
கர்த்தாவை சாரும் யாவர்க்கும்
சகாயம் கிட்டிடும்

4. அவர் மகா அன்பை ருசிப்பின்
பக்தர் நீர் காண்பீராம்
பக்தரே பக்தர் மட்டுமே
மெய்ப் பேறு பெற்றோராம்

5. கர்த்தாவுக்கஞ்சும் பக்தர்காள்
அச்சம் வேறில்லையே;
களித்தவரைச் சேவிப்பேன்
ஈவார் உம் தேவையை

6. நாம் போற்றும் ஸ்வாமியாம்
பிதா குமாரன் ஆவிக்கே
ஆதியில் போலும் எப்போதும்

மகிமை யாவுமே!