Type Here to Get Search Results !

Tamil Song - 345 - Uutruth thannirey Enthan

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)
ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்

1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே --- ஊற்று

2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்
கனி தந்திட நான் செழித்தோங்கிட
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட --- ஊற்று

3.இரட்சிப்பின் ஊற்றுகள் எந்தன் சபைதனிலே
எழும்பிடஇந்தவேளைஇரங்கிடுமே
ஆத்ம பலமும் பரிசுத்தமும்
ஆவலுடன்பெற்றிடவேவரம்தாருமே

4.திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே
பாவக்கறைகள் முற்றும் நீங்கிட

பரிசுத்த சமூகத்தில் ஜெயம் பெற்றிட