Type Here to Get Search Results !

Tamil Song - 341 - Arul Eraalamaai Peiyum

அருள் ஏராளமாய் பெய்யும்
உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்ப்பிக்குமே

அருள் ஏராளம், அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல
திரளாய் பெய்யட்டுமே

2. அருள் ஏராளமாய் பெய்யும்
மேக மந்தார முண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம்

3. அருள் ஏராளமாய் பெய்யும்
இயேசு வந்தருளுமே
இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன்

4. அருள் ஏராளமாய் பெய்யும்
பொழியும் இக்ஷணமே
அருளின் மாரியைத் தாரும்

ஜீவ தயாபரரே