Type Here to Get Search Results !

Tamil Song - 770 - Manasukkulley Pongum Kadalaai

மனசுக்குள்ளே பொங்கும் கடலாய்
ஆனந்த நீர் ஊற்று!
இயேசுவின் வரவால் நிகழ்ந்திடும்
விந்தையைக் கூறுங்கள் ஆர்ப்பரித்து!
மீட்புதானே தேவன் வழங்கும்
உன்னத சீர் அமைப்பு! - 2
இளமையிலே இந்த அற்புதம்
விடிந்தால்வாழ்வெல்லாம் சிறப்பு! - 2
ஆனந்த பூமழையில் - தினம்
பூரித்து நனைகின்றேன்!
ஆவியின் அருள் மழையில் - மனம்
நிரம்பியே வழிகின்றேன்!

1. மாசில்லாத புனித நல்வாழ்வே
புத்தம் புது படைப்பு - நல்
ரூபமாற்றமே அதனைக்
காட்டிடும் அழகின் அணிவகுப்பு
வாழ்வைஆள்பவர்வலிமையூட்டினால்
வெற்றிச் சிகரம் தொடும்” - அவர்
அழகு வாசனை, சொல்
வினையானால்
உலகம் பாரட்டும்! .... 2 -
ஆனந்த

2. நல்ல கிறிஸ்தவன் நாடறிய
அவன் வாழ்க்கை வேறாகும்!
நீதி நேர்மையும் உண்மை, நாணயம்
அவன் விடும் மூச்சாகும்!
தேவ ஆட்சியின் மாட்சி
வலிமைதான்அவனில்
அரங்கேறும்” - தினம்சிலுவையை
சுமந்து சீடன் நடந்தால்
சீடரின் தொகை பெருகும்!... 2 -
ஆனந்த

3. சபைகளின் நடுவே உலாவுகின்றவர்
விடுக்கும் அறைகூவல்!
ஆதியில்
கொண்டஅன்புக்குத்திரும்பிட
அழைக்கும் அன்புக்குரல்!
ஊன் - உடல் உள்ளம் யாவும்
படைத்தால் ஆனந்தம் ஓயாது
இளைஞர் எழுச்சியால்
சபைகள் வளரும்
சரித்திரம் மாறிவிடும்!... 2 -
ஆனந்த