Type Here to Get Search Results !

Tamil Song - 787 - Pithaave Endru Ummai

பிதாவே என்று உம்மை அழைக்க
கர்த்தாவே துரோகிக்கும் அருள் கூர்ந்தீர்
அன்பான தெய் வம் நீரே என்றுணர
ஆத்துமக் கண் திறந்தீர்!

1. பாவங்கள் தொலைந்து
ஆவியை அளித்து
மறுரூபம் எனக்களித்தீர் - என்
மகன், சகோதரன், சினேகிதன் என்றே
கர்த்தாவே எனை அழைத்தீர் - என்

2. ஆத்தும, தேகம் என் உயிர் எல்லாம்
உயிர்பலியாக்குகிறேன்
ஆவியின் மழையால்
அனுதினம் நனைத்தே
உத்தமனாய்  நிறுத்தும் - என்னை

3. என் பார்வை, பேச்சு, சித்தம்,
செயல் எல்லாம்
உம்அன்பை வெளிப்படுத்த
கருணையின் வெள்ளம்
நெஞ்சினில் ஊற்றி
வெற்றி வரம் தாரும் - என் நாதா

4. உம் நினைவே என் ஏக்கமாய் கொள்வேன்
நாதா நான் நிதம் தொழுவேன்
இரவு பகலுமாய்  வாழ்நாள்முழுவதும்

உம்மையே பின் செல்வேன் - தேவா