களிப்புடன் கூடுவோம்
கர்த்தரை நாம் போற்றுவோம்
அவர் தயை என்றைக்கும்
தாசரோடு தங்கிடும்
2. ஆதி முதல் தேவனே
நன்மை யாவுஞ் செய்தாரே
அவர் தயை என்றைக்கும்
மாந்தர் மேலே சொரியும்
3. இஸ்ரவேலைப் போஷித்தார்
நித்தம் வழிகாட்டினார்
அவர் தயை என்றைக்கும்
மன்னா போல சொரியும்
4. வானம் பூமி புதிதாய்
சிருஷ்டிப்பாரே ஞானமாய்
அவர் தயை என்றைக்கும்
அதால் காணும் யாருக்கும்