நீர் எங்கே சுமந்து போகிறீர்?
1. எங்கே சுமந்து போகிறீர்?
இந்தக் கானலில் உம
தங்கம் முழுதும்நோக,
ஐயா, என் ஏசுநாதா - எங்கே
2. தோளில் பாரம் அழுத்த,
தூக்கப்பெலம் இல்லாமல்
தாளுந் தத்தளிக்கவே,
தாபசோபம் உற நீர் - எங்கே
3. வாதையினால் உடலும்
வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச் சீமோனும்
பின்னாகத் தாங்கிவர - எங்கே
4. தாயார் அழுதுவர,
சார்ந்தவர் பின்தொடர
மாயம் இல்லாத
ஞானமாதர் புலம்பிவர - எங்கே
5. வல்ல பேயைக் கொல்லவும்,
மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள்
எல்லாம் நாசமாகவும் - எங்கே
6. வண்டக்கள்ளர் நடுவில்
மரத்தில் தொங்குவதற்கோ,
சண்டாளர்களைத் தூக்கும்
தலையோட்டு மேட்டுக்கோ -
எங்கே
7. மாசணுகாத சத்திய வாசகனே,
உமது தாசர்களைக் காக்கவும்
தாங்காச் சுமை எடுத்து - எங்கே