கூடி இருக்கும் விருந்தினரே (2)
புதிய கீதம் பாடிடுவோம்
புனிதமான இந்த நன்னாளிலே (2)
மணமகன் . . . மும் மணமகள் . . . யும்
கிறிஸ்துவில் இணைந்திடட்டும்
அல்லேலூயா
2. கிறிஸ்து சபையின் தலையானாரே
மனைவிக்கு புருஷனும்
தலையானாரே
கர்த்தருக்கு கீழ்ப்படிந்து
தேவாதி தேவனை துதித்திடுவீர்
3. கரை திரை ஒன்றுமில்லாமல்
பிழையற்ற மகிமையின் சபையாக
பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்திடுவீர்
துவக்கமான இந்த மணநாளிலே
4. புருஷனும் மனைவியும் ஒரே சரீரம்
ஒருவரில் ஒருவர் அன்புவைத்து
சாட்சியுள்ள வாழ்க்கை வாழ
மணமக்களை நாம்
வாழ்த்துகின்றோம்
5. கர்த்தர் நித்தமும் உங்களை நடத்தி
உன் ஆத்துமாவை திருப்தியாக்கி
வற்றாத நீர் ஊற்றுபோல் நடத்த
இயேசு நாமத்தில் வாழ்த்துகின்றோம்