Type Here to Get Search Results !

Tamil Song - 533 - Kaalame Devannai

காலமே தேவனைத் தேடு - ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு
சீரான நித்திய ஜீவனை நாடு (2)

1. மன்னுயிர்க்காய்  மரித்தாரே - மனு
மைந்தனென நாமம் வைத்திருந்தாரே
உன் சிருஷ்டிகரை நீ
உதயத்திலெண்ணு
உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு!

2. பாவச்சோதனைகளை வெல்லு-கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய்  மனுவேலனைப் பணிய

3. சிறுவர்கள் என்னிடஞ் சேரத் - தடை
செய்யா திருங்களென்றார் மனதார
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும்

4. வேலையுனக்குக் கைகூட - சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட
காலை தேடுவோர்
எனைக் கண்டடைவாரே
கண்விழித்து ஜெபஞ்

செய்யுமென்றாரே!