அடைக்கலம் அடைக்கலமே
ஏசுநாதா, உன்
அடைக்கலம் அடைக்கலமே!
திடனற்று பெலனற்றுன் னடியுற்றழும்
ஏழைக்கு
1. ஆசையோடு பாவமதில்
அலைந்து திரிந்தேனே
அன்புள்ள பிதாவுனை
விட்டகன்று பிரிந்தேனே
மோசமதையே அல்லால்
மற்றொன்றையும் காணாமலே என்
தோஷமோடு சேர்ந்தனன்
துரத்திடாது சேர்த்தருள்!
2. சிந்திய உதிரமதும் ஐந்து
திருக்காயமும்நொந்துருகென்
மனச் சஞ்சல மகற்றிடும்
பஞ்சமா பாவி எந்தன்
கெஞ்சும் கரத்தினை
எந்த விதமும் தள்ளா
திரங்கிடுவாய்
ஐயனே!
3. என்னிடத்தில் வருவோரை
எந்தவிதமும் தள்ளேன்
என்றுரைத்த வாக்கில்
எனக்கும் பங்கிலையோ?
அன்றுனது பக்கமதில்
ஆயிருந்த கள்ளனுக்கு
இன்று பரதீசிலிருப்பா
யென்றுரைத்தாயல்லவோ!