Type Here to Get Search Results !

Tamil Song - 340 - Aandavaa Pirasannamaaki


ஆண்டவா
பிரசன்னமாகி
ஜீவன் ஊதி உயிர்ப்பியும்
ஆசை காட்டும் தாசர் மீதில்
ஆசிர்வாதம் ஊற்றிடும்

1. அருள்மாரி எங்கள் பேரில்
வருஷிக்கப் பண்ணுவீர்
ஆசையோடு நிற்கிறோமே
ஆசீர்வாதம் ஊற்றுவீர்

2. தேவரீரின் பாதத்தண்டை
ஆவலோடு கூடினோம்
உந்தன் திவ்ய அபிஷேகம்
நம்பி நாடி அண்டினோம்

3. ஆண்டவா! மெய்பக்தர் செய்யும்
வேண்டுகோளைக் கேட்கிறீர்
அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்
இன்று மூட்டி நிற்கிறீர்

4. தாசர் தேடும் அபிஷேகம்
இயேசுவே கடாட்சியும்
பெந்தே கோஸ்தின் திவ்ய ஈவை
தந்து ஆசிர்வதியும்