என்
மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன
குறைவுண்டு ? நீ சொல் , மனமே
1. என்னுயிர்
மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் ,
என்னோடிருக்கவே
எழுந்திருந்தோர் ;
விண்ணுல
குயர்ந்தோர் , உன்னதஞ்சிறந்தோர் ,
மித்திரனே
சுகபத்திர மருளும் --- என் மீட்பர்
2. பாவமோ
, மரணமோ , நரகமோ ,பேயோ ,
பயந்து
நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர் ,
சாபமே
தீர்த்தோர் சற்குருநாதன் ;
சஞ்சலமினியேன்
? நெஞ்சமே , மகிழாய் --- என் மீட்பர்
3. ஆசி
செய்திடுவார் , அருள்மிக அளிப்பார் ,
அம்பரந்
தனிலெனக்காய் ஜெபிப்பார் ;
மோசமே
மறைப்பார் , முன்னமே நடப்பார் ;
மோட்சவழி
சத்யம் வாசல் உயிரெனும் --- என்
மீட்பர்
4. கவலைகள்
தீர்ப்பார் , கண்ணீர் துடைப்பார் ,
கடைசிமட்டுங்
கைவிடா திருப்பார் ;
பவமனிப்பளிப்பார்
, பாக்கியங் கொடுப்பார் ,
பரம
பதவியினுள் என்றனை எடுப்பார் --- என்
மீட்பர்
5. போனது
போகட்டும் , புவிவசை பேசட்டும் ,
பொல்லான்
அம்புக ளெய்திடட்டும் ,
ஆனது
ஆகட்டும் , அருள்மழை பெய்திடும் ,
அன்புமிகும்
பேரின்ப மெனக்கருள் --- என் மீட்பர்