ஒருபோதும்
மறவாத உண்மைப் பிதாவிருக்க,
உனக்கென்ன
குறை மகனே?
சிறுவந்தொட்டுனை
யொரு
செல்லப்
பிள்ளைபோற் காத்த
உரிமைத்
தந்தை யென்றென்றும்
உயிரோடிப்பாருன்னை
--- ஒருபோதும்
1. கப்பலினடித்
தட்டில் - களைப்புடன் தூங்குவார்,
கதறுமுன்
சத்தங்கேட்டால் - கடல் புசலமர்த்துவார்,
எப்பெரிய
போரிலும் - ஏற்ற ஆயுதமீவார்,
ஏழைப்பிள்ளை
உனக்கு - ஏற்ற தந்தை நானென்பார்
--- ஒருபோதும்
2. கடல்
தனக் கதிகாரி - கர்த்தரென் றறிவாயே,
கடவாதிருக்க
வெல்லை - கற்பித்தாரவர்சேயே,
விடுவாளோ
பிள்ளையத் தாய் - மேதினியிற்றனியே?
மெய்ப்
பரனை நீ தினம் - விசுவாசித்திருப்பாயே
--- ஒருபோதும்
3. உன்னாசை
விசுவாசம் - ஜெபமும் வீணாகுமா?
உறக்க
மில்லாதவர் கண் - உன்னைவிட டொழியுமா?
இந்நில
மீதிலுனக் - கென்னவந்தாலும் சும்மா
இருக்குமா
அவர்மனம்? - உருக்கமில்லாதே போமா? --- ஒருபோதும்
4. உலகப்
பேயுடலாசை - உன்னை மோசம் செய்யாது,
ஊக்கம்
விடாதே திரு - வுளமுனை மறவாது,
இலகும்
பரிசுத்தாவி - எழில் வரம் ஒழியாது,
என்றும்
மாறாத நண்பன் - இரட்சகருடன் சேர்ந்து --- ஒருபோதும்