எலியாவின்
தேவன் நம் தேவன்
வல்லமையின்
தேவன் நம் தேவன்
தாசர்களின்
ஜெபம் கேட்பார்
வல்லப்பெரும்
காரியம் செய்திடுவார்
கர்த்தரே
தேவன் கர்த்தரே தேவன்
என்றே
ஆர்ப்பரிப்போம் (2)
1.வேண்டிடும்
பக்தர்களின் ஜெபம் கேட்டே
பனிமழை
நிறுத்தினார் வல்ல தேவன்
பஞ்சகாலத்தில்
விதவை வீட்டில்
பாத்திரங்களை
அவர் ஆசீர்வதித்தார்
2.சத்துருக்கள்
முன்னிலையில் தேவமனிதன்
வீரமுடன்
முழங்கினான் தேவமனிதன்
அக்கினியால்
பதில் அளிக்கும் தேவனே
தேவன்
என்றார் தேவமனிதன்
3.தேவஜனம்
கூட்டிச்சேர்த்த தேவமனிதன்
பலிபீடம்
செப்பனிட்டு பலியுமீந்தார்
கேட்டருளும் கேட்டருளும்
என்றே
கதறினார் தேவமனிதன்
4.வானங்களை
திறந்தே வல்லதேவன்
அக்கினியால்
பதில் தந்தார் ஜீவதேவன்
கர்த்தரே
தேவன் கர்த்தரே தேவன்
என்றே
பணிந்தனர் தேவ ஜனங்கள்