Type Here to Get Search Results !

Tamil Song - 131 - Aathi Pitha Kumaaran


ஆதிபிதாக்
குமாரன் - ஆவி திரி யேகர்க்-கு
அனவரதமும் ஸ்தோத்திரம்! -திரியேகர்க்-கு
அனவரதமும் ஸ்தோத்திரம்!

நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,
நிறைந்த சத்திய ஞான மனோகர
உறைந்த நித்திய வேத குணாகர
நீடு வாரி திரை சூழு மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள்செய் - ஆதி

1.எங்கணும் நிறைந்த நாதர்-பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர்
துங்கமாமறைப்பிர போதர் - கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்
பங்கில்லான், தாபம் இல்லான், பகர்அடி முடிவில்லான்,
பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும்
பண்பதாய்சு யம்பு விவேகன்
அன்பிரக்கத  யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு, பரி
பாலனத்தையும்பண் பாய்நடத்தி, அருள்        - ஆதி

2.நீதியின் செங்கோல் கைக்கொண்டு - நடத்தினால்  நாம்
நீணிலத்தில்லாமல் அழிந்து,
தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் யேசுவைக் கொண்டு
பரன் எங்கள்மிசை தயை வைத்தனர்; இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம்,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும்!