அனவரதமும்
ஸ்தோத்திரம்! -திரியேகர்க்-கு
அனவரதமும்
ஸ்தோத்திரம்!
நீத
முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,
நிதமும்
பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,
நிறைந்த
சத்திய ஞான மனோகர
உறைந்த
நித்திய வேத குணாகர
நீடு
வாரி திரை சூழு மேதினியை
மூடு
பாவ இருள் ஓடவே அருள்செய்
- ஆதி
1.எங்கணும்
நிறைந்த நாதர்-பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும்
பணிபாதர்
துங்கமாமறைப்பிர
போதர் - கடைசி நடு
சோதனைசெய்
அதி நீதர்
பங்கில்லான்,
தாபம் இல்லான், பகர்அடி முடிவில்லான்,
பன்
ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும்
பண்பதாய்சு
யம்பு விவேகன்
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில்
சிருஷ்டிப்பு, மீட்பு, பரி
பாலனத்தையும்பண்
பாய்நடத்தி, அருள் - ஆதி
2.நீதியின்
செங்கோல் கைக்கொண்டு - நடத்தினால் நாம்
நீணிலத்தில்லாமல்
அழிந்து,
தீதறு
நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
தேவ
திருவுளம் உணர்ந்து,
பாதகர்க்
குயிர் தந்த பாலன் யேசுவைக்
கொண்டு
பரன்
எங்கள்மிசை தயை வைத்தனர்; இது
நன்று
பகர்ந்த
தன்னடி யார்க்குறு சஞ்சலம்,
இடைஞ்சல்
வந்த போதே தயவாகையில்
பாரில்
நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன்
முன் இருள் போலவே சிதறும்!