எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான்
துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்
1.ஆதியும் நீரே - அந்தமும் நீரே
ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே
2.தாய் தந்தை நீரே - தாழ்விலும் நீரே
தாபரம் நீரே - என் தாரகம் நீரே
3.வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
வாதையில் நீரே - என் பாதையில் நீரே
4.வானிலும் நீரே - பூவிலும் நீரே
ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே
5.துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
இன்னல் வேளையில் மாறாதவர் நீரே
6.தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
ராஜராஜனாம் - என் சர்வமும் நீரே