Type Here to Get Search Results !

எந்நாளுமே துதிப்பாய் பாடல் வரிகள்



எந்நாளுமே துதிப்பாய்
என்னாத்துமாவே, நீ
எந்நாளுமே துதிப்பாய்!

இந்நாள் வரையிலே
உன்னதனார் செய்த (2)
எண்ணில்லா நன்மைகள்
யாவு மறவாதுஎந்நாளு

1. பாவங்கள் எத்தனையோ
நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றிக்
குணமாக்கிப் (2)                                                                                    
பாரினில் வைத்த மகா
தயவை எண்ணிஎந்நாளு

2. எத்தனையோ கிருபை
உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை 
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி (2)
நித்தியமாக  ஜீவனை மீட்டதால்எந்நாளு

3. நன்மையாலுன் வாயை
நிறைத்தாரே பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை
உன் வயது கழுகைப்போல்
பலங்கொண்டு (2)
இன்னும் இளமை
போலாகவே செய்ததால்எந்நாளு

4.தந்தைதன் பிள்ளைகட்கு
தயவோடிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு
தங்கினால் (2)
சொந்தம்  பாராட்டியே தூக்கிச்                                                     

சுமப்பாரேஎந்நாளு