எந்நாளுமே
துதிப்பாய்
என்னாத்துமாவே,
நீ
எந்நாளுமே
துதிப்பாய்!
இந்நாள் வரையிலே
உன்னதனார் செய்த
(2)
எண்ணில்லா நன்மைகள்
யாவு மறவாது
– எந்நாளு
1. பாவங்கள்
எத்தனையோ
நினையா
திருந்தாருன்
பாவங்கள்
எத்தனையோ
பாழான
நோயை அகற்றிக்
குணமாக்கிப்
(2)
பாரினில்
வைத்த மகா
தயவை எண்ணி
– எந்நாளு
2. எத்தனையோ
கிருபை
உன்னுயிர்க்குச்
செய்தாரே
எத்தனையோ
கிருபை
நித்தமுனை
முடி சூட்டினதுமன்றி (2)
நித்தியமாக ஜீவனை
மீட்டதால் – எந்நாளு
3. நன்மையாலுன்
வாயை
நிறைத்தாரே
பூர்த்தியாய்
நன்மையாலுன்
வாயை
உன்
வயது கழுகைப்போல்
பலங்கொண்டு
(2)
இன்னும்
இளமை
போலாகவே
செய்ததால் – எந்நாளு
4.தந்தைதன்
பிள்ளைகட்கு
தயவோடிரங்கானோ
தந்தைதன்
பிள்ளைகட்கு
எந்த
வேளையும் அவரோடு
தங்கினால்
(2)
சொந்தம் பாராட்டியே
தூக்கிச்
சுமப்பாரே
– எந்நாளு