இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே
வாக்குகள் பல தந்து அழைத்து வந்தீர்
ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர்
இனி நீர் மாத்திரமே நீர் மாத்திரமே
நீர் மாத்திரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்
1.எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
காலத்தைப் படைத்தவர் தேடி வந்தீர்
சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின்
ஜனம் எம்மை உயர்த்திவைத்தீர் - இனி நீர்
2. செங்கடலைக் கண்டு சோர்ந்து போனோம்
யோர்தானின் நிலைக் கண்டு அஞ்சிநின்றோம்
பயப்படாதே முன் செல்கிறேன்
என்றுரைத்து எம்மை நடத்தி வந்தீர் - இனி நீர்
3.எதிரியின் படை எம்மை சூழும்போது
ஓங்கிய புயங்க்கொண்டு யுத்தம் செய்தீர்
பாட செய்தீர் துதிக்கச் செய்தீர்
எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் - இனி நீர்