வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு
உன்னை உருவாக்கின சிருஷ்டிகரை
பெலனுள்ள நாட்களில் முழு பெலத்தால்
அவரிலே நீயும் அன்பு கூர்ந்திடுவாய்
எழுப்பிடும் தொனி கேளாயோ
எழும்பிடும் காலமல்லோ
விழித்தேழு வாலிபனே !
விழித்தேழு கன்னியரே !
1.கண்களெல்லாம் மங்கலாய் போகுமுன்னே
பல்லெல்லாம் விழுந்து போகுமுன்னே
பெலன்குன்றி நடை தடுமாறு முன்னே
உன் உடல் மண்ணுக்கு திரும்புமுன்னே – எழும்பிடும்
2.இயேசு இல்லா வாழ்க்கையில்லாம் வெறுமைதானே
இயேசுவோடு நீ இணைந்தால் பெருமைதானே
அவரோடு நீ நடந்தால் மகிமைதானே
வருகையில் நின்றிடுவாய் இயேசு முன்னே – எழும்பிடும்
3.வாலிபத்தில் நுகத்தை நீ சுமந்தால்
பத்திரமாய் பேழையிலே இருந்திடுவாய்
உடைப்பட்டு உருவெடுத்து நீயும் வந்தால்
கர்த்தரின் கரத்திலே பயன்படுவாய் – எழும்பிடும்