Type Here to Get Search Results !

Tamil Song - 772 - Kaalaththin Arumaiyai Arinthu

காலத்தின் அருமையை அறிந்து
வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே
ஞாலத்தின் பரனுனை நாட்டின
நோக்கத்தைச்
சீலமாய்  நினைத்தவர் மூலம்
பிழைத்திடுவாய்  - கால

1. மதியை யிழந்து
தீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம்
அறிந்திடாயோ?
கதியாம் ரஷண்ய வாழ்வைக்
கண்டு நீ மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல
காலம் என்றறியாயோ? - கால

2. இகத்தினில் ஊழியம்
அகத்தியம் நிறைவேற
ஏசுனை அழைத்தாரல்லோ
மகத்துவ வேலையை மறந்து
தூங்குவாயானால் பகற்கால
முடியும் ராக்காலத்திலென்ன
செய்வாய் ? - கால

3. நோவாவின் காலத்தில்
நூற்றிருபது ஆண்டு
நோக்கிப்பின் அழித்தாரன்றோ?
தாவாத கிருபையால்
தாங்கி உனக்களித்த
தவணையின் காலமிவ் வருட
முடியலாமே! - கால

4. முந்தி எரேமியா
அனனியாவுக் குரைத்த
முடிவை நீ யறியாயோ!
எந்தக் காலமும் சிரஞ்சீவி
யென் றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய்  எப்போதும்

இருந்திடாயோ! - கால