என்தன் ஜீவன் இயேசுவே
சொந்தமாக ஆளுமே
என்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்
2. என்தன் கை பேரன்பினால்
ஏவப்படும் என்தன் கால்
வேலை செய்ய விரையும்
அழகாக விளங்கும்
3. என்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும் என் வாய்
மீட்பின் செய் தி கூறவும்
ஏதுவாக்கியருளும்
4. என்தன் ஆஸ்தி தேவரீர்
முற்றும் அங்கிகரிப்பீர்
புத்தி கல்வி யாவையும்
சித்தம் போல் பிரயோகியும்!
5. என்தன் சித்தம் இயேசுவே
ஒப்புவித்துவிட்டேனே
என்தன் நெஞ்சில் தங்குவீர்
அதை நித்தம் ஆளுவீர்!
6. திருப் பாதம் பற்றினேன்
என்தன் நேசம் ஊற்றினேன்
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்