Type Here to Get Search Results !

Tamil Song - 547 - Eththanai Thiral En

எத்தனை திரள் என் பாவம்
என் தேவனே!
எளியேன்மேல் இரங்கை யனே
நித்தம் என் இருதயம் தீயதென் பரனே;
நிலைவரம் எனில் இல்லை;
நீ என் தாபரமே

1.பந்தம் உன்மேல் எனக்கில்லை
என்பேனோ?
பணிந்திடல் ஒழிவேனோ?
சுத்தமுறுங் கரம்கால்கள்
விலாவினில்
தோன்றுது காயங்கள், தூய
சிநேகா!

2. என்றன் அநீதிகள்
என் கண்கள் முனமே
இடைவிடாதிருக்கையிலே,
உன்றன் மிகுங் கிருபை ,
ஓ! மிக பெரிதே
உத்தம மனமுடையோய் ,
எனை ஆளும்!

3. ஆயங் கொள்வோன்போல்,
பாவ ஸ்திரீபோல், அருகிலிருந்த
கள்ளன்போல்,
நேயமாய்  உன் சரண் சரண்
என வணங்கினேன்;
நீ எனக்காகவே மரித்தனை பரனே

4. கெட்ட மகன்போல்
துட்டனாய்  அலைந்தேன்,
கெடு பஞ்சத்தால் நலிந்தேன்;
இட்டமாய்  மகன் எனப்
பாத்திரன் அல னான்
எனை ரட்சித்திடல் உன்றன்

நிமித்தமே, அப்பனே!