Type Here to Get Search Results !

Tamil Song - 536 - En Jebavelai Vaangippen

 என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்
அப்போதென் துக்கம் மறப்பேன்
பிதாவின் பாதம் பணிவேன்
என் ஆசை யாவும் சொல்லுவேன்
என் நோவு வேளை தேற்றினார்
என் ஆத்ம பாரம் நீக்கினார்
ஒத்தாசை பெற்றுத் தேறினேன்
பிசாசை வென்று ஜெயித்தேன்

2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்
மா தாடிநமையோடு பிரார்த்திப்பேன்
மன்றாட்டைக் கேட்போர் வருவார்
பேர் ஆசீர்வாதம் தருவார்
என் வாக்கின் மேல் விசுவாசமாய்
என் பாதம் தேடு ஊக்கமாய்
என்றோர்க்கென் நோவை
சொல்லுவேன்
இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்

3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்
ஆனந்தக் களிப்படைவேன்
பிஸ்காவின் மேலே ஏறுவேன்
என் மோட்ச வீட்டை நோக்குவேன்
இத்தேகத்தை விட்டேகுவேன்
விண் நித்ய வாழ்வை பெறுவேன்
பேரின்ப வீட்டில் வசிப்பேன்

வாடாத கிரீடம் சூடுவேன்!