Type Here to Get Search Results !

tamil Song - 496 - Engeyaakinum - ishwmi

எங்கேயாகினும் - ஸ்வாமி -
எங்கேயாகினும்
அங்கே யேசுவே, - உம்மை -
அடியேன் பின்செல்வேன்

1. பங்கம், பாடுகள் - உள்ள -
பள்ளத்தாக்கிலும்,
பயமில்லாமல் நான் - உந்தன் - பாதம்
பின்செல்வேன்

2. வேகும் தீயிலும் - மிஞ்சும் - வெள்ளப்
பெருக்கிலும்
போகும்போதும் நான் - அங்கும் -
ஏகுவேன் பின்னே - எங்கே

3. பாடிந வனத்திலும் - உந்தன் - பாதை
சென்றாலும்,
பதைக்காமல் நான் - உந்தன் - பக்கம்
பின்செல்வேன்

4. எனக்கு நேசமாய்  - உள்ள -
எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே - உம்மை - எங்கும்
பின்செல்வேன்

5. உந்தன் பாதையில் - மோசம் -
ஒன்றும் நேரிடா;
மந்தாரம் மப்பும் - உம்மால் -
மாறிப்போகுமே

6. தேவையானதை - எல்லாம் -
திருப்தியாய்த் தந்து,
சாவு நாள் வரை - என்னைத் தாங்கி
நேசிப்பீர்

7. ஜீவித்தாலும் நான் - எப்போ -
செத்தாலும் ஐயா!
ஆவலாகவே - உம்மை - அடியேன்

பின்செல்வேன்!