என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்
ஏற்றுக் கொள்ளும் யேசுவே
அன்னை தந்தை உந்தன்
சன்னதி முன்னின்று (2)
சொன்ன வாக்குத்தத்தமல்லாது, இப்போது
1. அந்தகாரத்தி னின்றும் பாவப் பேய்
அடிமைத் தனத்தி னின்றும்
சொந்த ரத்தக் கிரயத்தால்
எனைமீட்ட
எந்தையே, உந்தனுக்கிதோ!
படைக்கிறேன்
2. ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன்
பாத்ரமதாய்
அதை பாவித்து கொள்ளக்
காத்திருக்கின்றேன் கருணைசெய்தேவா
3. நீதியி னாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு
ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த் தந்தேன்
என்றன் சரீரத்தை