குயவனே! குயவனே!!
படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே
1. வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்துத் தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்கச் செய்திடுமே
வேதத்தில் காணும் பாத்ரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே - குயவனே
2. விலை போகாத பாத்திரம் நான்
விரும்புவாரில்லையே
விலையில்லா உம் கிருபையால்
உகந்த தாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னைத்
தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே - குயவனே
3. மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கைப்
பின்பற்றினேன்
கண்டேனில்லை இன்பமே
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாள் எல்லாம் உம் பாதம் சேரும்
பாதையில் நடத்திடுமே - குயவனே