என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே - என்றும்
நன்மைகள் செய்பவரே -
என்றும்
நன்மைகள் செய்பவரே
1.மனிதர் தூற்றும் போது - உம்மில்
மகிழச் செய்பவரே அதைத்தாங்கிட
பெலன் கொடுத்து தயவாய் அணைப்பவரே
2.தனிமை வாட்டும்போது
நல் துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே
3.வாழ்க்கைப் பயணத்திலே
மேகத் தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே