Type Here to Get Search Results !

Tamil Song - 377 - Kaanaatha Aatin Pinney

காணாத ஆட்டின் பின்னேகர்த்தர்
கண்ணீருடன் அலைந்தார்
அன்போடு உன்னை அழைக்கின்றாரே
இன்றே திரும்பி நீ வா

1.முள்ளும் புதரும் காடும் மழையும்
உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார்
சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்
சாத்தான் வலையில் நீ சிறையாகினாய்காணாத

2.சுத்த இதயம் வேண்டாம் என்றெண்ணி
கர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய்
யோனாவைப் போல நீ போனாயல்லோ
ஏசுபரன் வாக்கு வேருத்தாயல்லோகாணாத

3.என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும்
இயேசுவின் பாதை நீ விட்டோடாதே
நீதி நிறைந்த தம் கரங்களை
நீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார்காணாத

4.துன்மார்க்கரெல்லாம் சன்மார்க்கரோடே
தேவ கோபாக்கினையால் மாள்பவரே
கர்த்தரின் பந்தியில் நீ பங்கடைய
கண்ணீருடன் நீயோ அருள் வேண்டுவாய்காணாத

5.எத்தனை நேரம் உன்னை அழைத்தார்
இத்தனை காலம் நீ தள்ளலாமோ
கர்த்தரின் சித்தம் உன் வேளையிதே

கண்டு உணர்ந்து விரைந்தே நீ வாகாணாத