எம்
இயேசு மா இராஜனே வந்திடுவார்
1.அந்த
நாள் மிக சமீபமே
சுத்தர்கள்
யாவரும் சேர்ந்திடவே
தேவ
எக்காலம் வானில் முழங்க
தேவாதி
தேவனை சந்திப்போமே – எக்காள
2.வானமும்
பூமியும் மாறிடினும்
வல்லவர்
வாக்குதாம் மாறிடாதே
தேவதூதர்
பாடல் தொனிக்க
தேவன்
அவரையே தரிசிப்போமே – எக்காள
3.கண்ணிமை
நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே
யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர்
கவலை அங்கே இல்லை
கர்த்தர்
தாமே வெளிச்சமாவார் – எக்காள
4.கர்த்தரின்
வேளையை நாம் அறியோம்
கர்த்தரின்
சித்தமே செய்திடுவோம்
பழங்கள்
யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும்
வாழ்ந்திடுவோம் – எக்காள
5.கள்ளர்கள்
பரவி அங்கு மிங்கும்
கர்த்தரின்
வார்த்தையைப் புரட்டுகிறார்
கர்த்தரே
வாரும் வாஞ்சையை தீரும்
கருத்துடன்
நாம் விழித்திருப்போம் – எக்காள