Type Here to Get Search Results !

Tamil Song - 225 - Kirupai Emmai Suzhnthu Kollum

கிருபை எம்மைச் சூழ்ந்து கொள்ளும் - தம்
கிருபை கர்த்தரில் மகிழ்வோம்
களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம்  கிருபை

1.யோர்தானைக் கடந்துவந்தோம்- எங்கள்
இயேசுவின் பெலம் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னேநடந்தார்
சோர்வின்றி காத்துக் கொண்டார்

2.தேசமே பயப்படாதே - எங்கள்
தேவன் கிரியை செய்கின்றார் தேசத்தின்
நன்மை சேமம் அருள்வார்
தாசர்கள் வேண்டிடுவோம்

3.கர்த்தர் இவ்வாண்டினிலே - பெரும்
காரியம்  செய்திடுவார்
கால் வைக்கும் தேசம்
இயேசு தருவார் காத்திருந்தே அடைவோம்

4.ஆண்டுகள் நன்மையினால் - முடி
சூண்டு வளம் பெருக
தேசத்தின் மீதே கண்களை வைத்தே
பாசமாய் நோக்கிடுவார்

5.ஜாதி ஜனங்களையும் - வந்து மோதி அசைத்திடுவார்
காத்துக் கிடக்கும் உள்ளம்
மகிழும் கர்த்தரே வந்திடுவார்

 தூய கற்புள்ள தேவ சபையாய்  விரம் சேர்ந்திடுவோம்