Type Here to Get Search Results !

Tamil Song - 222 - Kaakum Karangal Undeynakku

காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்

நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை

1.நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக் கொடி என் மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன்

2.கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
கர்த்தர் என்னைக் கரம்பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போலே எழும்பிடுவேன்

3.அத்திமரம் துளிர் விடாமல்
ஆட்டுமந்தை முதலற்றாலும்
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டுப்   போவதில்லை

4.இயேசுவுக்கு ஜெயம்  ர்
மகிமையினால் முடிசூட்டினீர்
அதே மகிமை அதே ஜெயத்தை
நானும்கூட சுதந்தரிப்பேன்