கர்த்தரை
நம்பியே ஜீவிப்போம்
கவலை
கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா
காத்திடும் பரமனின்
கரங்களை
நாம் பற்றிக் கொள்வோம்
1.ஜீவ
தேவன் பின் செல்லுவோம்
ஜீவ
ஒளிதனை கண்டடைவோம்
மனதின்
காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும் – கர்த்தரை
2.உண்மை
வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும்
கர்த்தர் துணை
கண்கள்
அவன் மீது வைத்திடுவார்
கருத்தாய்
காத்திடுவார் – கர்த்தரை
3.உள்ளமதின்
பாரங்களை
ஊக்கமாய்
கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு
நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு
வந்தாதரிப்பார் (2)
4.அன்புமிகு
அண்ணலிவர்
அருமை
இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை
வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி
அணைத்திடுவார் (2)
5.நீதிமானின்
சிரசினின் மேல்
நித்திய
ஆசீர்வந்திறங்குமே
கிருபை
நன்மைகள் தொடருமே
கேட்பது
கிடைக்குமே (2)
6.இம்மைக்கேற்ற
இன்பங்களை
நம்மை
விட்டே முற்றும்அகற்றுவோம்
மாறாத
சந்தோஷம் தேடிடுவோம்
மறுமை
ராஜ்ஜியத்தில் (2)