எந்தன்
அன்புள்ள ஆண்டவர்
இயேசுவே
நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப்
போல் ஒரு தேவனை பூமியில்
அறிந்திடேன்
உயிர்
தந்த தெய்வமே நீர்
ஆ ஆனந்தம் ஆனந்தமே
அல்லும்
பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே
எந்தன் ஆருயிரே (2)
2.பெற்ற
தாயும் என் தந்தையுமானவரே
மற்ற
எல்லாம் எனக்கு நீரே
வானம்
பூமியும் யாவுமே மாறிடுமே
நீரோ வாக்கு மாறாதவரே
3.உயர்
அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன்
நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மையல்லாதிப்
பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள
தெய்வமே நீர்
4.பொன்
வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ
பண ஆசையும் வீண் அல்லவோ
பரலோகத்தின்
செல்வமே
என்
அரும் இயேசுவே போதும் எனக்கு
நீரே
5.எந்தன்
சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த
வாலிப நாட்களிலே
இந்த
மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த
ஜீவியமே