Type Here to Get Search Results !

Tamil Song - 22 - Enthan Naavil Puthu Paattu


எந்தன் நாவில் புதுபாட்டு
எந்தன் இயேசு தருகிறார்(2)

ஆனந்தம் கொள்ளுவேன்
அவரை நான் பாடுவேன் -உயிருள்ள
நாள் வரையில் அல்லேலூயா(2)

1.பாவ இருள் என்னை வந்து
சூழ்ந்து கொள்கையில் -தேவனவர்
தீபமாய் என்னை தேற்றினார்

2.வாதை நோயும் வந்தபோது
வேண்டல் கேட்டிட்டார் -பாதை காட்டி
துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார்

3.சேற்றில் வீழ்ந்த என்னையவர்
தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம்
ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார்

4.தந்தை தாயும் நண்பர் உற்றார்
யாவுமாயினார் - நிந்தை தாங்கி
எங்குமவர் மேன்மை சொல்லுவேன்

5.இவ்வுலக பாடு என்னை
என்னை செய்திடும் -அவ்வுலக
வாழ்க்கைக் காண காத்திருக்கிறேன்