Type Here to Get Search Results !

Kalvari Sinegam Lyrics

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல் மனம் மாற்றி கரைந்தோடச்  செய்யும் (2)

1. காலங்கள் தோறும் பாவத்தில்  உள்ளோர்
காணட்டும் உந்தன்  கல்வாரி அன்பை  -(2)
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்
கும்பிடுவோரை குணமாக்கும்  தேகம்

2. இருண்டதோர் வாழ்வை
இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண -(2)
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்
என்னை காணுவோர் உம்மை காணட்டும்

3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன்
ஆட்கொள்ளும் தேவா- (2)
நான் சிறுகவும் நீர் பெருகவும்

தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்