1.திரிமுதல் கிருபாசனனே,சரணம்!
ஜெகத்தல ரட்சகன் தேவா, சரணம்!
தினம் அனுதினம் சரணம்;- கடாட்சித்
தினம் அனுதினம் சரணம்,
2. நலம் வளர் ஏக திரித்துவா, சரணம்,
நமஸ்கரி உம்பர்கள் நாதா ,சரணம் !
நம்பினேன் இது தருணம் ;- தருணம்
நம்பினேன், தினம் சரணம்,
3. அருவுருவ அருள் அரசே ,சரணம்!
அன்று இன்று என்றும் உள்ளாய் சரணம்!
அதிகுணனே, தருணம் -கிரணமொளிர்
அருள் வடிவே, சரணம்,
4. உலகிட மேவிய உனதா,சரணம்!
ஓர் கிருபாசன ஒளியே, சரணம் ஒளி
அருள்வாய் ,தருணம் மனுவோர்க்கு
உத்தமனே ,சரணம்;
5. நித்தியம தோத்திர நிமலா, சரணம்!
நிதி இஸ்ரயேலரின் அதிபதி, சரணம்!
நீதா, இது தருணம் -கிருபைக்கொரு
ஆதாரா, சரணம்