மங்கள கீதங்கள் பாடிடுவோம்
மணவாளன் இயேசு மனமகிழ
கறைதிறை நீக்கி திருச்சபையாக்கி
காத்தனர் கற்புள்ள கன்னிகையாய்
கோத்திரமே யூதா கூட்டமே
தோத்திரமே துதி சாற்றிடுவோம்
புழுதியின்றெம்மை உயர்த்தினாரே
புகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம்
2. இராஜ குமாரத்தி ஸ்தானத்திலே
இராஜாதிராஜன்
இயேசுவோடே இன
ஜனநாடு, தகப்பனின் வீடு
இன்பம் மறந்து சென்றிடுவோம்
3. சித்திரை தையலுடை அணிந்தே
சிறந்த உள்ளான மகிமையிலே
பழுதொன்றுமில்லா
பரிசுத்தமான
பாவைகளாகப் பறந்திடுவோம்
4. ஆரங்கள் பூட்டி அலங்கரித்தே
அவர் மணவாட்டி
ஆக்கினாரே விருந்தறை
நேசகொடி ஒளிவீச
விற்றிருப்போம் சிங்காசனத்தில்
5. தந்தத்தினால் செய்த மாளிகையில்
தயாபரன் ஏசு புறப்படுவார்
மகிழ்
கமழ் வீச மகத்துவநேசர்
மன்னன் மணாளன்
வந்திடுவார்