Type Here to Get Search Results !

Tamil Song - 599 - Kalvaariye Kalvaariye

கல்வாரியே! கல்வாரியே!
கல்மனம் உருக்கிடும் கல்வாரியே!

1.பாவி துரோகி
சண்டாளன் நானாயினும்
பாதகம் போக்கிப்
பரிவுடன் இரட்சித்த

2.பாவியை மீட்கவே
நாயகன் இயேசுதம்
ஜீவனின் இரத்தத்தைச்
சிந்தின உன்னத

3.நாதன் எனக்காக
ஆதரவற்றோராய்
பாதகர் மத்தியில்
பாதகன்போல் தொங்கும்

4.முள்முடி சூடியே
மூன்றாணி மீதினிலே
கள்ளனைப் போல
என் நாயகன் தொங்கிடும்

5.சர்வம் படைத்தாளும்
 சொர்லோக நாயகன்
நிர்வாணக் கோலமாய்
நிற்பதைக் காண்பேனோ!

6.எண்ணும் நன்மை ஏதும்
என்னிலே இல்லையே!
பின்னை ஏன்  நேசித்தீர்   
என்னை என் பொன்நாதா!

7.இவ்வித அன்பை நான்
எங்குமே காணேனே!
எவ்விதம் இதற்கீடு

ஏழையான் செய்குவேன்!