பாரீர் கெத்செமனே
பூங்காவிலென் நேசரையே
பாவியெனக்காய் வேண்டுதல்
செய்திடும் சத்தம் தொனித்திடுதே
1.தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய் தேவாதி
தேவன் ஏகசுதன் படும்
பாடுகள் எனக்காயே
2.அப்பா இப்பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்
எப்படியுமும் சித்தம் செய்ய
என்னை தத்தம் செய்தேன் என்றாரே
3.இரத்தத்தின் வேர்வையாலே
மெத்த வேதனையுற்றே
இம்மானுவேலன் உள்ளமுருகியே
வேண்டுதல் செய்தனரே
4.மும்முறை தரைமீதே
தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தாமே வீழ்ந்து
ஜெபித்தாரே பாதகர் மீட்புரவே
5.என்னையும் தம்மைப் போல
மாற்றும் இம்மாநேசத்தை
எண்ணி எண்ணியே உள்ளம்
கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன்