Type Here to Get Search Results !

Tamil Song - 594 - Kurusinil Thongiye

குருசினில் தொங்கியே குருதியும் வடியக்
கொல்கதா மலைதனிலே - நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
கொள்ளாய்க் கண் கொண்டு

1.சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ! -  தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ

2.பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன்போல் தொங்க - யூத
பாதகர்கள் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை

3.சந்திர சூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ! - தேவ
சுந்தர மைந்தனுயிர் விடு காட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ?

4.ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
 இறைவன் விலாவதிலே - அவர் 
தீட்டிய  தீட்சைக் குருதியும்
ஜலமும் திறந்தூற்றோடுது பார்

5.எருசலேமாதே மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ? - நின்
எருசலையதிபன் இள மணவாளன்

ஏற்றகோல மிதோ?